சனி, 20 பிப்ரவரி, 2016

நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் - இயற்கை மருத்துவம்

நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் - இயற்கை மருத்துவம்
உலகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் நீரிழிவு தான். இதற்குப் பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை நல்ல ரிசல்ட்டுகளைக் கொடுத்து வந்தாலும், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது
இயற்கையாக நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கின்றன. இவற்றைச் சாப்பிட்டு வந்தால், ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மற்றவர்கள் இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோயையே நெருங்க விடாமல் தடுக்க முடியும்.
நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்!!
ப்ராக்கோலி :-
உலகிலேயே மிகவும் சத்தான காய்கறிகளில் ப்ராக்கோலிக்குத் தான் முதலிடம். இதிலுள்ள சல்ஃபோரபேன் என்ற கூட்டு வேதிப் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளும், அவ்வியாதியைத் தடுக்க நினைப்பவர்களும் தங்கள் உணவில் கண்டிப்பாக ப்ராக்கோலியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பசலைக் கீரை :-
பசுமையான கீரை வகைகள் அனைத்துமே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை. குறிப்பாக, பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயே நமக்கு வராமல் தடுத்து விடலாம் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பீட்ரூட் :-
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பீட்ரூட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. எனவே நாம் எல்லோரும் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு :-
இந்தக் கிழங்கில் உள்ள ஆந்தோசையனின் என்ற பொருளுக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எரிச்சல் மற்றும் வைரஸுக்கு எதிரான பண்புகளும் இக்கிழங்கில் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான உணவாகும்.
கேல் :-
கோஸ் வகையைச் சேர்ந்த இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களான பி-6 மற்றும் கே ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. இவை எல்லாம் நீரிழிவின் முக்கிய எதிரிகள் ஆகும்.
முட்டைக்கோஸ்:-
நீரிழிவு நோயைத் தடுப்பதில் முட்டைக்கோஸுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. இரத்தத்தில் உள்ல சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கணையங்களின் முறையான இயக்கத்திற்கும் அது உதவுகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரப்பதே இந்தக் கணையங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்பாரகஸ் :-
கணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கங்கள் சிறப்பாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான உணவாகும். இன்சுலின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இது நன்றாகக் கட்டுப்படுத்துகிறது.
பீன்ஸ் :-
நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் பீன்சும் ஒன்றாகும். நீரிழிவுக்கு எதிரான பண்புகள் பீன்ஸில் நிறைய உள்ளன.
கேரட் :-
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டினுக்கும் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
பூண்டு :-
பூண்டில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நீரிழிவைத் தடுப்பதிலும் பூண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால்களைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் பூண்டு குறைக்கிறது

திங்கள், 15 பிப்ரவரி, 2016

Jock Itch - Tinea Cruris - அந்துப்பூச்சி கால்

how to get rid of jock itch
Here are the top 10 ways to get rid of jock itch.  - Copied from http://www.top10homeremedies.com/

1. Tea Tree Oil

Tea tree oil has natural antifungal properties that can effectively treat jock itch along with other types of skin infections. It also has deep cleansing and stimulating elements along with a powerful antibacterial quality. It will also help alleviate itchiness and inflammation associated with jock itch.
  • Use a cotton ball to apply tea tree oil to the affected skin twice daily. Continue for a few days until the symptoms disappear completely. If it causes a lot of burning sensation then you can use mix four or five drops of tea tree oil in one tablespoon of coconut oil and then use it.
  • Another option is to add a few drops of tea tree oil to your bath water and soak in it for about 15 minutes.
  • You can also use soap or shower gel containing tea tree oil.

2. Apple Cider Vinegar

Washing the infected skin with diluted apple cider vinegar is a great way to deal with jock itch. Apple cider vinegar has strong antifungal and antibacterial properties to cure and control various skin infections.
  1. Mix two tablespoons of apple cider vinegar in two cups of warm water.
  2. Wash the infected area with this solution and allow it to dry on its own.
  3. Repeat this process two or three times daily, especially before going to bed.

3. Rubbing Alcohol

Rubbing alcohol is another effective home remedy for jock itch because it kills the fungus causing the infection. Plus, being a drying agent, it helps keep the affected area dry; fungi thrive in warm, moist environments.
  1. Dip a cotton ball in 90 percent isopropyl alcohol.
  2. Dab it on the affected area. You need not wash it off as the alcohol will evaporate quickly.
  3. Do this a few times daily until you are satisfied with the results.

4. Listerine

Listerine is an excellent home remedy for fungal infections like jock itch and athlete’s foot, thanks to its antiseptic, antifungal and antibacterial properties.
  1. Use a cotton ball to apply the amber Listerine mouthwash on the affected skin and leave it on until it dries completely. Initially it will hurt, but you will soon get relief from the soreness and inflammation.
  2. Repeat three or four times daily for a few months for complete relief.
Note: Do not use Listerine on open wounds.

5. White Vinegar

White vinegar can also help greatly in dealing with a skin infection like jock itch as it has antifungal and antiseptic properties.
  • Mix one part of white vinegar and four parts of water. Soak a washcloth in this solution and use it to wash the affected area, gently and thoroughly. Allow the solution to dry on its own; you need not rinse it off. Repeat once or twice daily.
  • Another option is to apply a mixture of equal parts of white vinegar and coconut oil on the affected skin. Leave it on for a few hours before washing it off. Do this twice daily until you get rid of the problem.

6. Bleach

Bleach has antiseptic, antibacterial and antifungal properties that help treat jock itch.
  1. Mix one-fourth cup of bleach in a bathtub full of water.
  2. Soak in it for about 15 minutes daily or every other day, depending upon the severity of the condition.
Be sure to pat dry your skin after your bath as moisture can worsen jock itch.

அந்துப்பூச்சி கால்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

அப்படியானால் அவசியம் படியுங்கள்....

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா? அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது 

 இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்...?

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்...?
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது