ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தோல் ஆரோக்கியம்

வெயிலில் அதிக நேரம் செல்வதால் தோல் கருமையாகிறது. தூசுகள் வியர்வையில் படிவதால் தோல் கருமை நிறம் ஆகிறது. தோலில் சுருக்கம், கண்களில் கருவளையம் ஏற்படுகிறது. நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் இப்பிரச்னைகளுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி தோல் சுருக்கம், கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சோற்றுக் கற்றாழையில் உள்ளிருக்கும் சதையில் இருந்து சாறு எடுத்து தோல் சுருக்கம் உள்ள இடத்தில் பூசுவதால் சுருக்கம், கருமை நிறம் மாறும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட சோற்றுக் கற்றாழை முதுமையை போக்கும் உன்னதமாக மருந்தாகிறது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பலம் தரக்கூடியது. ஊட்டசத்துக்களை உள்ளடக்கியது. குளிர்ச்சி தரக்கூடியது. தோலில் ஏற்படும் புற்றை போக்க கூடியது.
ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம்பூ, மஞ்சள் பொடி. ஆவாரம் பூ பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். தோலில் சுமார் 15 நிமிடங்களில் பூசி வைத்திருந்தால் தோல் சுருக்கம், கருமை நிறம் மாறி பழைய நிலைக்கு வரும்.
அவாரம் பூவை தேனீராக்கி குடிப்பதன் மூலம் தோல் ஆரோக்கிய பெறும். ஆவாரம் பூ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். வியர்வை நாற்றத்தை போக்கும். உடலுக்கு நல்ல வண்ணத்தை கொடுக்க கூடியது. மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. தக்காளியை பயன்படுத்தி தோல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். சிறிது அதிமதுர பொடியுடன், தக்காளி பசை சேர்த்து நன்றாக கலந்து பூசிவர தோல் சுருக்கம், கருமைநிறம் மாறும். தக்காளி வைட்டமின் சி சத்து கொண்டது. மருந்துவ குணங்களை கொண்ட இது புத்துணர்வு தரக்கூடியது. முதுமையை போக்கும் தன்மை கொண்டது.
தோல் ஆரோக்கியம் பெறுகிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். உருளைக் கிழங்கை சுத்தப்படுத்தி பச்சையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் தேன் சேர்த்து கலந்து பூசி வர சுருக்கம், கருமை நிறம் மாறும். இது சிறுசிறு தீக்காயங்களுக்கு மருந்தாக விளங்குகிறது. உருளைக் கிழங்கு ஊட்டசத்துக்கள் மிகுந்தது. புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. புண்களை ஆற்றக்கூடியது. பூஞ்சை காளன்களை போகும் தன்மை உடையது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.
குளிர்ந்த தன்மை கொண்டது. தேன் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. அக்கி புண்களை ஆற்றும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கொப்புங்களை கொண்ட அக்கி புண்களால் அரிப்பு, வலி ஏற்படும். இது நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியது. பருப்பு கீரையை நன்றாக அரைத்து அக்கி புண்கள் மீது பூசிவது, சாப்பிடுவதன் மூலம் அக்கி புண்கள் சரியாகும். எரிச்சல், வலி குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக