செவ்வாய், 31 டிசம்பர், 2019

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension)


அப்பிள் சிடர் வினீகர்

இயற்கையின் வரப்பிரசாதமான  ஆப்பிள் சிடர் வினிகரில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.  வினிகர்களின் பயன்பாட்டில் ஆப்பிள் சிடர் வினிகருக்கு தனி இடம் உண்டு. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. தவிர உடலில் இருக்கக் கூடிய சோடியம் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள ரென்னின் (Rennin) என்னும் என்சைம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகரில் தேன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்

எலுமிச்சை சாறு
தினமும் காலையில் ஒரு க்ளாஸ் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்துக் குடித்து வர உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் உலகெங்கிலும் உள்ள ஆரோக்கிய வல்லுநர்கள். இது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் இருந்தும் நச்சுக்களை நீக்குகிறது. ரத்த நாளங்களை மென்மையடைய செய்வதோடு ரத்த அழுத்ததை குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கிறது. இதனை தினமும் குடித்து வருவதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம்
வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இந்த நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து இதனைக் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்புகள் அதிகம் உள்ளதால் உடலின் ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.  இந்த சியா விதைகளை அரை மணி நேரம் ஊறவைத்து அந்த நீரை குடித்து வாருங்கள்.  இதன் பலனை கண்கூடாக ஒரு மாதத்தில் பார்க்கலாம். 

குறைந்த அல்லது கொழுப்பில்லாத பால்
உடலுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் கால்சியம், குறைந்த அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் அதிகம் உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவுகின்றன. முழு கொழுப்புள்ள பாலில் உள்ள பால்மிட்டிக் அமிலம் ரத்த குழாய்களைத் தளர்த்தக்கூடிய சிக்னல்களை தடை செய்வதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது உடலுக்கு நன்மை தரும். மேலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய பானத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.


------------------------------------------------------------------------------------------

புதினா  இலை  – 1  கப் 
கொத்தமல்லி – 1 கப்
பெரிய நெல்லிக்காய் – 5
தண்ணீர் – 1 கப்

பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.  பின் வடிக்கட்டி குடித்து வர இரத்த அழுத்தம் குறையும்

------------------------------------------------------------------------------------------

இஞ்சி சாறு 1ஸ்பூன்+ தேன்1ஸ்பூன்+ தண்ணீர் 200மிலி கலந்து காலை மாலை குடியுங்கள்

------------------------------------------------------------------------------------------

பூண்டு

இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக்காய்

முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முள்ளங்கி

இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

எள்

சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

ஆளி விதை

ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

ஏலக்காய்

உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது
ஆதாரம் : இயற்கை வைத்தியம்

  • ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.
  • இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.
  • ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எனவே, குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்ப்பதே சிறந்ததாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் புகை பிடிக்கும் பழக்கமும் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிடும் மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடுவதே நல்லது என்கின்றனர்.
  • ஒருவர் சாப்பிடும் உணவில் உப்பின் உபயோகமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் சுவையை அதிகரிக்க உப்பு உதவக்கூடும். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது கொழுப்புப் படிவங்களை தமனிகளில் ஏற்படுத்தி ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும்
  • மேலும், உடலில் உள்ள நீர் இருப்பை சமன்படுத்தவும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தவும் உதவும் பொட்டாசியம் சத்து தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவுகின்றது. வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெள்ளரி, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், தக்காளி, காலிபிளவர், கீரை மற்றும் பிரக்கோலி போன்ற உணவுகள் உடலில் பொட்டாசியம் சத்தை அதிகரிக்கக் உதவும்.
  • இதுதவிர ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களும், காய்கறிகளும் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்
தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அவகேடோ,  பொட்டாசியம் நிறைந்த புரோக்கோலி, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.   

லாஃப்டர் தெரப்பி
மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலை நாடுகளில் 'லாஃப்டர் தெரப்பி'  மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.  இப்போது நம் ஊர்களிலும் இது பிரபலமடையத் தொடங்கிவிட்டது. காலையில் வாக்கிங் முடித்து, பலர் ஒரே இடத்தில் கூடி, சிரித்து தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கிக்கொள்ளலாம். லாஃப்டர் தெரப்பியோடு, வீட்டில் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளை கண்டு களிப்பது, புத்தகம் படிப்பது,  குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது எல்லாம் பலன்களைத் தரும். ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராகும். சிரிக்கும்போது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சுவாசிப்பதுடன், அதிகமான ஆக்ஸிஜனையும் உள்வாங்குகிறோம். இதனால் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உடனடியாகக் குறைகிறது.
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------



பன்னீர் பூ பயன்படுத்தி சர்க்கரை குறைக்க

பன்னீர் பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் படம்பார்த்து வாங்குங்கள் வாங்கி இரவில் ஒருடம்ளர் தண்ணீரில் ஐந்து பூ போட்டு ஊறவையுங்கள் காலையில் வடிகட்டி தண்ணீரை மட்டும் வெறும்வயிற்றில் குடித்து ஒருமணிநேரம் கழித்து மற்ற. உணவு சாப்பிடலாம்
பத்தியம் கிடையாது மாத்திரை சாப்பிட்டாலும் பரவாயில்லை பதினைந்துநாளிலே சர்க்கரை கட்டுக்குள் வரும் இது என் சொந்த. அனுபவம் சர்க்கரை கட்டுக்குள் வந்துவிட்டால் அதன்பின் உங்களின் உணவுகட்டுபாடுதான்
தானிய. உணவு வாரத்தில் இரண்டுமுறை முருங்கைகீரை பாகற்காய் சாப்பிடுங்கள் என்னையில் பொறித்த. உணவுகளை சாப்பிடாதீர்கள் அவித்த உணவுவகைகளை சாப்பிடுங்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்
சர்க்கரை கட்டுக்குள் வந்தபின்பு மாத்திரையை நிறுத்தலாம் பன்னீர் பூ தண்ணீரும் தேவைக்கு பயன்படுத்தலாம்
பன்னீர் பூ படம் பாருங்கள் ஒருடம்ளர் தண்ணீரில் ஐந்து பூ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
Image may contain: food

எத்தனை அழுக்கு பற்கள் இருந்தாலும், இதைப் பயன்படுத்தினால் பற்களை பிரகாசமாக்கும்!

எத்தனை அழுக்கு பற்கள் இருந்தாலும், இதைப் பயன்படுத்தினால் பற்களை பிரகாசமாக்கும்!
நிறைய உணவை சாப்பிட்ட பிறகு, பெரும்பாலான மக்கள் சரியாக துவைக்க மாட்டார்கள், இது பற்களின் மஞ்சள் நிறத்தை படிப்படியாக அதிகரிக்கச் செய்கிறது, ஏனெனில் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழுகி வாடை வரத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நாம் யாருக்கும் முன்னால் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை, இந்த வாசனையால், நாங்கள் யாருடனும் பேச தயங்குகிறோம்.
ஆனால் இன்று நாங்கள் கொண்டு வந்த தீர்வு, நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும், இது உங்கள் பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்றுவதோடு அழுகல் மற்றும் துர்நாற்றத்தையும் நீக்குவது மட்டுமல்லாமல், இது உங்களுக்கு ஒரு பிரகாசமான புன்னகையைத் தரும், மேலும் நீங்கள் ஒருவரின் முன் வருவீர்கள் பேசுவதில் நீங்கள் எந்த சங்கடத்தையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இந்த செய்முறையை தயாரிக்க, முதலில் சில துளசி இலைகளை எடுத்து சிறிய துண்டுகளாக உடைத்து, பின்னர் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, பின்னர் எந்த பற்பசையையும் சேர்த்து, அந்த பற்பசையை முயற்சிக்கவும் இதில் எந்த சுவையும் இல்லை, இறுதியில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்டை தயார் செய்யவும்.
இந்த பேஸ்டை தூரிகையில் தடவுவது தினமும் காலையிலும் மாலையிலும் துலக்குவதுதான், இந்த பேஸ்டில் துளசி மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையான விஷயங்கள் உள்ளன, இது அழுகல் மற்றும் துர்நாற்றத்தை நீக்குவதோடு பற்களை வலிமையாக்குகிறது, அதே போல் அதில் இருக்கும் பேக்கிங் சோடா பற்களுக்கு உடனடி பிரகாசத்தை தருகிறது உள்ளது

சளியால் அவதியா?

சளியால் அவதியா?
சட்டுன்னு போக இத செய்யுங்க!
நுரையீரல் சளியை வெளியேற்ற ஒரே ஒரு வெற்றிலையுடன் இஞ்சி சிறிய துண்டு.!
பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு. இந்த மருந்து ஆஸ்துமா, நுரையீரல் சளி, இருமல், போன்றவற்றிக்கு நிவாரணம் அளிக்கிறது. சரி வாங்க முதலில் மருத்துவ குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்:
வெற்றிலை ஒன்று. இஞ்சி சிறிய துண்டு. தேன் தேவையான அளவு. இவற்றை வைத்து எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம். முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிடுங்கள். வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் இஞ்சியை சேருங்கள். நன்றாக கொதித்த தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதில் வரும் ஜூஸை சிறிய பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸ் சிறிது காரமாக இருக்கும் அதனால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது மருந்து தயார். இந்த ஜூஸை காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடித்து வர இரண்டே நாட்களில் நுரையீரல் சளி ஆஸ்துமா போன்றவை நீங்கிவிடும்.
இது மலத்துடன் வெளியேறுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த ஜூஸ் 10 வயதிற்கு மேட்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம்

திங்கள், 16 டிசம்பர், 2019

சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள் :-
தலைவலி :-
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு :-
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
நெஞ்சு சளி :-
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
தொடர் விக்கல் :-
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம் :-
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு :-
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம் :-
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
குடல்புண் :-
மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
வாயுத் தொல்லை :-
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வயிற்று வலி :-
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல் :-
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி :-
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு :-
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு :-
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய் :-
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.
தேமல் :-
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
மூலம் :-
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
தீப்புண் :-
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு :-
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வறட்டு இருமல் :-
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்

திங்கள், 9 டிசம்பர், 2019

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது ஏன்?

#தைராய்டு_பெண்களின் #தலையாய_பிரச்னையாக #மாறிவருகிறது_ஏன்
ஆங்கில மருத்துவம் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறது
அப்படிபட்ட கொடிய நோயா தைராய்டு நோய்……
எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல………
இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.
என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.
உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை.
நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது....
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது.
தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும்.
சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
எனக்கு தைராய்டு இருக்கு. மூன்று மாத்த்திற்கு ஒருமுறை டெஸட் எடுக்கிறேன் . டாக்டர் கூடினால் 150 கிராம் டேபிளட் எடுக்கச்சொல்ரார். குறைந்தால் 100கிராம் வெறும் வயிற்றில் காலை சாப்பிடச் சொல்ரார். ஒரு விளக்கமும் சொல்லமாட்டேங்குறார்.
எனக்கு Hypothairoidaaa அல்லது Hyperthyroidaaa எப்படித் தெரிந்து கொள்வது
இந்த ஆன்டி தைராய்டு பரிசோதனைகள் கொஞ்சம் சிக்கலானது.
ஒருவருக்கு நார்மல் T4,T3 இருந்து TSH மட்டும் அதிகமாக இருந்தால் அதற்க்கு SUBCLINICAL THYROID என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக ஆன்டி தைராய்டு உள்ளது.
சில பேர்களுக்கு இந்த ஆன்டி தைராய்டு நார்மலாக இருப்பதாக காண்பிக்கிறது.
சில பேர்களுக்கு TSH,T3,T4 நார்மலாக இருக்கும் ஆனால் ஆன்டி தைராய்டு அதிகமாக இருக்கும்.
தைராய்டு மருந்து எடுக்காத, ஆன்டி தைராய்டால் பாதிக்கபட்டிருக்கும் ஒருவரின் TSH பரிசோதனை முடிவுகளை பார்ப்போம்.
JAN – 8.5
FEB – 6.3
MAR – 0.03
APR – 2.5
MAY – 7.8
இந்த TSH பரிசோதனை முடிவுகளை பார்க்கும் போது
JAN – 8.5, FEB – 6.3 ஹைபோதைராய்டு இருக்கிறது மாதிரி காட்டுகிறது,
MAR – 0.03 ஹைபர்தைராய்டு இருக்கிறது மாதிரி காட்டுகிறது.
APR – 2.5 நார்மல் ஒரு பிரச்னையும் இல்லை என்பது மாதிரி காட்டுகிறது.
MAY – 7.8 மீண்டும் ஹைபோதைராய்டு இருக்கிறது மாதிரி காட்டுகிறது.
இதை பார்க்கும்போது ஒருவர் ஆன்டி தைராய்டால் பாதிக்கபட்டிருந்தால், அவருடைய TSH அளவுகள் ஆன்டி தைராய்டு பாதிப்பிற்கேற்ப ஏற்றத்தாழ்வுகளுடன் மாறுபடுகிறது.
ஆன்டி தைராய்டை தூண்டிவிடும் காரணிகள் அதிகமாகும்போது, பாதிப்பு அதிகமாகிறது. குறையும்போது குறைகிறது.
எனவே ஒருவருக்கு ஹைபோதைராய்டு அறிகுறிகள் இருந்தால், மருத்துவ பரிசோதனைகள் TSH,T3,T4 போற்றவற்றை நார்மலா காட்டினால், ஆன்டி தைராய்டு பரிசோதனை எடுக்கவேண்டும்.
👉ஒருவருக்கு……
TSH,T3,T4,FT3,FT4, ANTI-TPO,ANTI-TG போன்றவை நார்மலாக இருந்தாலும், ஹைபோதைராய்டு அறிகுறிகள் இருந்தால், சிறிது மாதங்கள் கழித்து, மீண்டும் பரிசோதனை எடுத்து உறுதிபடுத்தி கொள்ளவேண்டும்.
மீண்டும் சொல்கிறேன் ஹைபோதைராய்டு அறிகுறிகள் முக்கியம். ஆன்டி தைராய்டு இருக்கும்போது பரிசோதனை முடிவுகள் வேறுபடுகிறது.
 இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது……
ஒருவர் ஆன்டி தைராய்டால் பாதிக்கபட்டிருந்தால், அவருடைய TSH அளவுகள் ஆன்டி தைராய்டு பாதிப்பிற்கேற்ப ரெங்கராட்டினம் போல் மேலும், கீழும் போய் வருகிறது.……
சில நேரங்களில், தட்ப வெப்ப நிலைக்கேற்பவும் TSH அளவுகள் மாறுபடுகிறது.
TSH அளவுகளுக்கு ஏற்றமாதிரி, மருத்துவர்கள் மாத்திரைகளின் அளவை மாற்றுகிறார்கள்.
காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் ?
அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு
ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.
தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே
தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.
தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்
தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.
1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.
💢ஹைபோ தைராய்டு
காரணமாக………
காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும்.
முடி கொட்டுதல்,
பசியின்மை,
எடை அதிகரித்தல்,
கர்ப்பம் தரிக்க முடியாமை,
உடலில் அசாத்தியமான சோர்வு,
அசதி, மந்த நிலை
போன்றவை இருக்கும்.
💢ஹைபர் தைராய்டு
காரணமாக……
படபடப்பு,
நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும்.
கை காலில் நடுக்கம்,
டயரியா,
லூஸ் மோஷன்,
மாதவிலக்கு தொந்தரவு,
கால் வீக்கம்,
ஞாபக சக்தி குறைதல்,
கடுமையான பசி,
கோபம் வருதல்,
முடி கொட்டுதல்,
கர்ப்பம் தரிக்க முடியாமை,
அளவிற்கு அதிகமான உடம்பு வலி
போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.
உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு
பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.
சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே
பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும். இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும். படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.
தைராய்டில் புற்றுநோய் வருமா
தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன.
💢 தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.
1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.
 தைராய்டு மிகையான நோயின் அறிகுறிகள்
• வீங்கிய தைராய்டு சுரப்பி (காய்டர்)
• துருத்திய கண்கள் (முண்டகக்கண், முண்டகம் தாமரை)
• துரிதமான இருதயத் துடிப்பு (டேகிகார்டியா)
• ஏடை குறைவு
• கிறுகிறுப்பு
• கைகள் நடுக்கம்
• மிகையான வியர்வை
தைராய்டின் மந்தமான நோயின் அறிகுறிகள்:
• மந்தமான வளர்சிதை மாற்றம்.
• தடைப்பட்ட வளர்ச்சியம் முதிர்ச்சியும்.
• மந்தமான மனநிலை
• சருமத்தின் சிலாகங்களின் வீக்கம் மற்றும் பல நோய்கள் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு சுரப்பி மந்தமாகப் பணி புரிந்தாலோ அல்லது சுரப்பி சுருங்கி விட்டாலோ அந்த நிலையை கிரிடினிஸம் (அறிவுச்சோர்வு, மடமை) என்கிறோம்.
 தைராய்டுக்கும்
பெண்கள் கருப்பம் அடைவதுக்கும் என்ன. சம்பந்தம் மற்றும் என்ன தொடர்பு……
★★கர்ப்பம் அடைவதை தடுக்கும்
தைராய்டு சுரப்பி( THYROID )
தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பியை பாதிக்கும் பிரச்சினை ஆகும். இந்த தைராய்டு சுரப்பி நமது கழுத்து பகுதியில் பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து இருக்கும். இந்த சுரப்பி தான் நமது உடலுக்கு தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த தைராய்டு சுரப்பை பொருத்து இதை இரண்டு வகைப்
படுத்துகின்றனர்.
உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும்.
தைராய்டு சுரப்பி………
‘தைராக்சின்' (T4),
‘டிரைஅயடோதைரோனின்'
(T3)
எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்' எனும் புரதம் உள்ளது. இதில் ‘டைரோசின்' எனும் அமினோ அமிலம் உள்ளது.
தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினை இணைத்து வினைபுரிந்து T4 மற்றும் T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன.
 ஹைப்பர் தைராய்டிசம்
இந்த வகையில் தைராய்டு ஹார்மோன் அதிகளவில் சுரந்து உடலின் ஓட்டுமொத்த செயல்பாட்டை யும் துரிதப்படுத்தி விடும். இதனால் உடலுறுப்புகளை பாதிப்படையச் செய்து விடும்.
கருவுறுதல் இந்த தைராய்டு ஹார்மோன் பெண்களின் கருவுறுதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே கர்ப்ப காலத்தில் சரியான அளவில் தைராய்டு ஹார்மோனை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
இது உங்களுக்கும்
உங்கள் கரு வளர்ச்சிக்கும் நல்லது.
தைராய்டு மற்றும் கர்ப்ப காலம் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஹார்மோன் பயன்படுகிறது.
குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
முதல் 2-3 மாதங்கள் வரை குழந்தையின் வளர்ச்சி தைராய்டு ஹார்மோனை சார்ந்தே இருக்கும்.
18-20 வாரம் வரை இந்த தைராய்டு ஹார்மோன் நஞ்சுக்கொடி வழியாக தாயிடமிருந்து குழந்தைக்கு செல்லும்.
12 வாரத்தில் இது செயல்பட தொடங்கி விடும்.
18-20 வாரத்தில் கருவிற்கு தேவையான தைராய்டு ஹார்மோன் முழுவதும் சுரக்கப்படும்.
 பெண்களின் கருவுறுதலுக்கு இரண்டு முக்கிய ஹார்மோன் காரணமாகிறது.
1, க்யூமேன் குரோனிக் கோனாடோட்ரோபின்
2, ஈஸ்ட்ரோஜன்,
இந்த இரண்டு ஹார்மோன் தான் இரத்தத்தில் இருக்கும் தைராய்டு ஹார்மோன்.
எனவே இந்த இரண்டு ஹார்மோன் அளவும் சம அளவில் இருப்பது ஆரோக்கியமான கருவுறுதலுக்கு உதவும். எனவே தான் கருவுற்ற நேரத்தில் தைராய்டு ஹார்மோன் அளவை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகச்சை அளிக்கின்றனர்.
ஹைப்போ தைராய்டிசம்
முதல் மாதத்தில் இருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை இந்த தைராய்டு ஹார்மோன் தான் கொடுக்கிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் இது தடைபட ஆரம்பித்து விடும். இதனால் இதன் மூலம் வளர்ச்சி அடைகின்ற குழந்தைகள்
மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும். உடல் நிலை கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே தாயின் தைராய்டு ஹார்மோன் அளவு மிகவும் முக்கியம்.
ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் கருவுறுதல் கருவுற்ற காலத்தில் உங்கள் தைராய்டு ஹார்மோனை அளவை பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
அப்படி ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது.
கர்ப்ப காலத்தில் இரண்டாம் பருவத்தில் ஆன்டி தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ப்ரோபைல்தையோரோசில் என்ற சிகச்சையை மேற்கொள்ளலாம்.
🇨🇭 முன்னெச்சரிக்கை
கருவுறுதலுக்கு முன்பாகவும் சரி கருவுற்ற பின்னரும் சரியான முறையில் தைராய்டு ஹார்மோனை பரிசோதித்து வருவது ஆரோக்கியமான குழந்தை பிறப்பை கொடுக்கும்.
கருவுற்ற காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டால் குழந்தை பிறப்பு பாதிப்படையும் என்பதை மறவாதீர்கள்.
அறிகுறிகள்…………
மலச்சிக்கல்,
வாந்தி,
எடை இழப்பு,
சோர்வு,
பயம்,
தூக்கம்
போன்றவை ஏற்படும்.
கர்ப்ப காலம் முழுவதும் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும்.
 க்ரோனிக் லிம்போசைடிக்
தைராய்ட்ஸ்
நோயெதிர்ப்பு மண்டலம் தைராய்டு சுரப்பியை தாக்கி பாதிப்பை உண்டாக்கினால் அது க்ரோனிக் லிம்போசைடிக் தைராய்ட்ஸ் என்றழைக்கப்படுகிறது.
#கருச்சிதைவு ஏற்படவும் இது வழி செய்கிறது.
👉மகப்பேறு
தைராய்டு அழற்சி மகப்பேறு ஏற்பட்ட பிறகு ஏற்படும் தைராய்டு அழற்சி 20 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இது கர்ப்ப கால
#நீரிழிவு_நோய் மாதிரி ரெம்ப அரிதாக ஏற்படுகிறது.
சேமிக்கப்பட்ட தைராய்டு ஹார்மோன் தைராய்டு சுரப்பியிலிருந்து வெளியேறுவதால் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த தைராய்டு சுரப்பி அதிகமாக வெளியேறி இரத்தத்தில் கலக்கும் போது ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் மகப்பேறு கால ஒரு வருடத்திற்கு பிறகு இது ஏற்படலாம். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்களின் தைராய்டு அளவு மிகவும் முக்கியம்.
சரியான தைராய்டு பராமரிப்பு தான் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமானது.
ஏன் தேவை
தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி,
மூளை வளர்ச்சி,
எலும்பின் உறுதி,
தசையின் உறுதி,
புத்திக்கூர்மை
எனப் பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும்,
புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும்,
சிறுகுடலில் உள்ள உணவிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும்,
ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கும்
தைராய்டு சுரப்பி தேவை.
மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது,
உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது,
பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது
ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தைராய்டுசுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் எவை
தைராய்டு சுரப்பி மூன்று வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை………
T3 – ட்ரை அயோடோதைரோனைன்,
T4 – டெட்ரா அயோடோதைரோனைன், கால்சிடோனின்.
🔴 TSH (டி எஸ் எச் )
என்றால் என்ன
#பிட்யூட்டரிசுரப்பி டி.எஸ்.எச். என்ற ஹார்மோனைச் சுரந்து, அதன்மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டித் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. டி.எஸ்.எச். என்பது தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன்.
மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி ஹார்மோன்களின்
அளவு எவ்வளவு
★T3 – சீரம் ட்ரைஅயோடோதைரோநைன் ஹார்மோன்
அளவு 80 – 230 ng/dl.
★T4 – சீரம் தைராக்சின் ஹார்மோன் அளவு 5 – 14ng/dl.
★TSH அல்லது சீரம் தைரோட்ரோபின்
அளவு 0.4 – 6 miu/L.
💉பரிசோதனை💉
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் (ஃபாஸ்டிங்) மேற்கண்ட ரத்தப் பரிசோதனை, தைராய்டு ஸ்கேன் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்யலாம்.
 ×× தவிர்க்கவேண்டியவை
முட்டை கோசு, காலிஃபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், நூல்கோல், கடுகு, டீ, காபி, இனிப்புப் பலகாரங்கள், கேக், பிரெட் வகை, உலர் பழங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள், வெள்ளை சீனி, தேன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
💚 ++ சேர்க்கவேண்டியவை
தேங்காய், பூண்டு, வெங்காயம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, அமுக்கரா, காளான், பசலைக் கீரை, சிவப்பு அரிசி, பல்வேறு தானியங்கள், பார்லி, ஓட்ஸ், தக்காளி போன்றவற்றோடு சரிவிகித பாரம்பரிய உணவு முறை. பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.